ஹிமாச்சல்பிரதேசத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நிதிநிலை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச சட்டசபையின் நிதிநிலை கூட்டத்தொடர் பிப்ரவரி 26ஆம் தேதி ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவின் உரையுடன் தொடங்கும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
17 அமர்வுகளுடன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் மார்ச் 20 அன்று நிறைவடைகிறது. மார்ச் 22ஆம் தேதி மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.