மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று எனது கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இருப்பினும், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.