21 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
பிரேசிலின் அமேசானியா-1 உள்பட 21 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் ஏவப்படுகிறது.
பிரேசிலின் அமேசனியா - 1 செயற்கைக்கோளானது விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக ஏவப்பட உள்ளது.