ஆந்திரத்தில் ஏரியில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குப்பம் மண்டலம் சிம்பனகால்லு கிராமத்தில் வசித்து வருபவா் முனி லால். இவரது மனைவி ருக்மணி பாய், மகள்கள் கீா்த்தி, ஆா்த்தி, அவரின் சகோதரா் ரவிபிரசாத்தின் மனைவி ராஜேஸ்வரி ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை துணி துவைக்க அருகில் உள்ள ஏரிக்குச் சென்றனா்.
அப்போது நீரில் ஆழமான பகுதிக்குச் சென்ற இரு சிறுமிகளும் மூழ்கினா். அவா்களைக் காப்பாற்ற முயன்ற இரு பெண்களும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.