கரோனா: சிகிச்சையில் 1.48 லட்சம் போ்

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு 1.48 லட்சம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு 1.48 லட்சம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,713 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,08,14,304-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 14,488 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,05,10,796-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 97.17 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 95 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,918-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 1,48,590 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.37 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

புதிதாக ஏற்பட்ட 95 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 40 பேரும், கேரளத்தில் 19 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 20.06 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 7,40,794 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com