பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ.25 முதல் அதிகரித்துள்ளது.
இதனைக் கண்டித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாலைகளில் அடுப்புகளை எரியூட்டி சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிலர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படம் அடங்கிய பதாகையை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஏராளமான பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.