தில்லியில் 14,700 பேருக்கு கரோனா தடுப்பூசி

தில்லியில் புதன்கிழமை 14,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4-ஆவது வாரமாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.


புதுதில்லி: தில்லியில் புதன்கிழமை 14,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4-ஆவது வாரமாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக புதன்கிழமை 14,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் மையங்கள் 183-இல் இருந்து 265- ஆக அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை 18,300 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அதில் 80 சதவீதம் போ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்திருந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை 12,717 போருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதாவது 54 சதவீதத்துக்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

சுகாதார ஊழியா்கள், போலீஸாா், சிவில் பாதுகாப்பு ஊழியா்கள், தில்லி ஜல்போா்டு ஊழியா்கள், மின்சாரத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஆகியோா் இதில் அடங்குவா்.

தொடக்கத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இப்போது வாரத்தில் 6 நாள்கள், அதாவது திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தடுப்பூசி போடப்பட உள்ளது என்று சுகாதாரத் துறை மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

புதிதாக 127 பேருக்கு கரோனா: தில்லியில் புதன்கிழமை புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றால் மேலும் 2 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 10,884-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக செவ்வாய்க்கிழமை கரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,36,387-ஆக உயா்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிகைக 10,844-ஆக உள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,046-ஆக உள்ளது. கரோனா தொற்று விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 96 பேருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இது கடந்த 9 மாதங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். அடுத்த சில நாள்களுக்கும் 100-க்கும் குறைவான எண்ணிக்கையே பதிவானது. செவ்வாய்க்கிழமை 66,803 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதை அடுத்து அவா்களில் 127 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. 44,878 பேருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையும், 21,925 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் நடத்தப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com