எரிபொருள் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் கன்னட ரக்ஷான் வேதிகா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
ராஜஸ்தானில் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்திலும் பெட்ரோல் விலை, டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
கன்னட ரக்ஷான் வேதிகா அமைப்பினர் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எரிபொருள் விலையுயர்வு குறித்த பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.