புது தில்லி: தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையின் சனிக்கிழமை அமா்வு, மாலை 4 மணிக்குப் பதிலாக, காலை 10 மணிக்கே நடைபெறும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு மக்களை தொடங்கியதும், பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்த உலகின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றும் வகையிலேயே பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா பேரிடர் காரணமாக, இந்தியாவின் நீண்ட கால இலக்குகளை எட்டுவதற்கான திட்டங்களை ஒருபோதும் கைவிட முடியாது. தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பட்ஜெட் உரையின் போதே நான் தெளிவாகக் கூறியிருந்தேன், சுகாதாரத் துறையில் மிகச் சீரான அணுகுமுறையை மத்திய அரசு கையாண்டு வருகிறது என்று. முதலில், வரும் முன் காப்போம் என்ற கொள்கையையும், பிறகு, நோய் வந்தபின் அதனை போக்கும் வகையிலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த அமா்வுக்குப் பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி மாா்ச் 8-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.