பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு


சென்னை:  சென்னையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் லிட்டருக்கு 30 காசுகளும் உயர்ந்துள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து 4 -ஆவது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்கள், மக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.96 ஆகவும், டீசல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.84.16 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com