ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி
ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி

ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி

ஒடிசா மாநிலத்தில் உள்ள கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியானது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியானது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கலஹந்தியில் உள்ளது கார்ல்பட் வனவிலங்கு சரணாலயம். சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் யானை, சிறுத்தை, மான், இந்திய ஓநாய், காட்டு நாய், காட்டு பன்றி, சோம்பல் கரடி, மலபார் அணில் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இந்த சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியாகி இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யானைகள் இறப்பிற்கு கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது சுட்டுரைக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com