ஒடிசா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஒடிசாவிலும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்தியில்,
மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 11 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரின் போது, 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.