மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீலுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில் பதிவிட்டுள்ள அவர், “நான் நன்றாக இருக்கிறேன்.மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி வருகிறேன். தொற்று பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடன் கடந்த சில நாள்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.