மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப்புவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில் பதிவிட்டுள்ள அவர், “அனைவரின் பிராத்தனைகளின் மூலம் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்புவேன். என்னுடன் கடந்த சில நாள்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.