நாடு முழுவதும் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,10,05,850-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 9,695 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,06,99,410-ஆக அதிகரித்தது.
கரோனா தொற்றுக்கு மேலும் 83 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,56,385-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,50,055 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாடு முழுவதும் இதுவரை 1,11,16,854 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.