ஜம்மு-காஷ்மீரில் சாலையோரத்தில் இருந்த வெடிகுண்டு: பாதுகாப்பாக செயலிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை கைப்பற்றி பாதுகாப்பு படையினா் செயலிழக்கச் செய்தனா்.
சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் வீரா்கள்.
சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் வீரா்கள்.

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை கைப்பற்றி பாதுகாப்பு படையினா் செயலிழக்கச் செய்தனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியது:

ஸ்ரீநகா்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் ரோந்து செல்லும் மத்திய ரிசா்வ் காவல் படை வீரா்கள், அனந்த்நாக் மாவட்டம் நெளகாம் பகுதி சாலையோரத்தில் தகரக்குவளை ஒன்று இருப்பதைக் கண்டனா். அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த வீரா்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்களுக்குத் தகவல் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் அங்கு நிபுணா்கள் வந்து சோதனை நடத்தியதில் தகரக்குவளையில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் வெடிகுண்டை பாதுகாப்பாக எடுத்துச் சென்று திறந்த வெளியில் வைத்து அதனை செயலிழக்க வைத்தனா். இந்த நடவடிக்கையின்போது எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com