மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,807 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,772 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 80 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,21,119 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20,08,623 பேர் குணமடைந்துள்ளனர், 51,937 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 59,358 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.