ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. எனவே நிதி ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பட்ஜெட்டை முன்வைக்கும் போது கூறினார்.
இது மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றாவது பட்ஜெட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.