பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மின்னணு இருசக்கர வாகனத்தில் சென்றது அனைவரது கனவத்தையும் ஈர்த்துள்ளது.
கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
இதனைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல் விலையுயர்வைக் கண்டிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டரி பொருத்தப்பட்ட மின்னணு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு மத்தியில் நெரிசல் மிகுந்த சாலையில் மம்தா பானர்ஜி இருசக்கர வாகனத்தில் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.