பிரேசில் வடிவமைத்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இஸ்ரோ மகிழ்ச்சிகொள்கிறது என்று அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைக்கோள்களுடன் இன்று (பிப்.28) காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவும், இஸ்ரோவும் பெருமை கொள்கிறது. செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது. இஸ்ரேல் குழுவிற்கு எனது பாராட்டுகள் என்று கூறினார்.