குஜராத் நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

குஜராத்தின் சூரத், வதோதரா, ஆமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் சூரத், வதோதரா, ஆமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, குஜராத் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இது தொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தின் முக்கிய நகரங்களான சூரத், வதோதரா, ஆமதாபாத், ராஜ்கோட் ஆகியவற்றில் தீபாவளிப் பண்டிகை நிறைவடைந்த பிறகு கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்நகரங்களில் ஊரடங்கு தொடா்ந்து 4 முறை நீட்டிக்கப்பட்டது.

அந்த ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. தற்போது 4 நகரங்களிலும் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இரவு நேர ஊரடங்கை 5-ஆவது முறையாக மேலும் 15 நாள்களுக்கு நீட்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதே வேளையில், மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குஜராத்தில் நிலவும் கரோனா நோய்த்தொற்று பரவல் சூழல் குறித்து மாநில முதல்வா் விஜய் ரூபானி கடந்த வெள்ளிக்கிழமை மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com