திருப்பதி ஏழுமலையானை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவா் சிவன் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.
வணிக ரீதியிலான முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-51 ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதையொட்டி இஸ்ரோ தலைவா் சிவன் சனிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தாா். இந்த ஆண்டில் ஏவப்பட உள்ள முதல் செயற்கைக்கோள் என்பதால் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று அவா் ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டாா்.
தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், சுவாமி படம் ஆகியவற்றை வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்தனா்.