தில்லி: 7 மாதங்களுக்குப் பிறகு 500-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

தில்லியில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தில்லி: 7 மாதங்களுக்குப் பிறகு 500-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு
தில்லி: 7 மாதங்களுக்குப் பிறகு 500-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

தில்லியில் கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை வீசி வந்தது. அரசின் தொடர் நடவடிக்கைகளால் கரோனா பரவல் விகிதம் தில்லியில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.26 லட்சமாக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 6,10,535 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5,342 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 10,571 பேர் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com