ஒடிசாவில் ஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு

ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு(கோப்புப்படம்)
ஒடிசாவில் ஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு(கோப்புப்படம்)

ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஒடிசா மாநில பள்ளிக்கல்வித் துறை சனிக்கிழமை அறிவித்தது. 

கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com