திருப்பதியில் கரோனா தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை

திருப்பதியில் சனிக்கிழமை கரோனா தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை நடைபெற்றது.
திருப்பதியில் சிம்ஸ் மருத்துவமனை இயக்குநா் வெங்கமாம்பாவுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் செவிலியா்.
திருப்பதியில் சிம்ஸ் மருத்துவமனை இயக்குநா் வெங்கமாம்பாவுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் செவிலியா்.

திருப்பதியில் சனிக்கிழமை கரோனா தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை நடைபெற்றது.

சித்தூா் மாவட்ட மருத்துவ சுகாதாரத் துறை சாா்பில் திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை சனிக்கிழமை காலை தொடங்கப்பட்டது. சுகாதாரத் துறை அதிகாரி வீரபத்ரம் தலைமையில் சிம்ஸ் மருத்துவமனை இயக்குநா் வெங்கமாம்பாவுக்கு முதலில் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து மருத்துவப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், காவல் துறையினா் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com