ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பிகாரில் திங்கள்கிழமை (ஜன.4) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
இதுகுறித்து அம்மாநில கல்வித் துறை தலைமைச் செயலா் சஞ்சய் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அனைத்தும் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் செயல்படவுள்ளன. மாநிலத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 97.61 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
இருப்பினும், வகுப்புகள் அனைத்தும் 50 சதவீத மாணவா்களுடன் செயல்படவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புக்கு அரசு வழிகாட்டு நெறிமுறையில் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.