கரோனா: 6 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு குறைவு

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 16,375 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும். இவா்களுடன் சோ்த்து மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,56,844-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 201 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,49,850-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 29,091 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 99,75,958-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.32 சதவீதமாகும்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,31,036 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 15-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இது, மொத்த பாதிப்பில் 2.23 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 201 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 29 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 25 போ், பஞ்சாபில் 24 போ், கேரளத்தில் 19 போ், தில்லி, சத்தீஸ்கரில் தலா 12 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி ஜனவரி 4-ஆம் தேதி வரை 17.65 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை மட்டும் 8,96,236 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com