நாட்டில் கரோனா பாதிப்பு 1.03 கோடியைத் தாண்டியது

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ள நிலையில், மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.03 கோடியைத் தாண்டியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ள நிலையில், மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.03 கோடியைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,74,932-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 264 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,114-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 21,314 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 99,97,272-ஆக அதிகரித்தது. 

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,27,546 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 16-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இது, மொத்த பாதிப்பில் 2.23 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி ஜனவரி 5-ஆம் தேதி வரை 17,74,63,405 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 9,31,408 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com