மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,382 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 4,382 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,54,553 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,570 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 66 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,52,759 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 49,825 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 50,808 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் புதிதாக 795 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 400 பேர் குணமடைந்துள்ளனர், 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,96,319 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11,155 பேர் பலியாகியுள்ளனர்.