மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இரவுநேரப் பொதுமுடக்கம் நீட்டிக்கும் திட்டம் இல்லை என மும்மை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுமுடக்கத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என புதன்கிழமை மும்பை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.