உத்தரப் பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் காலியாகவுள்ள 12 சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.
இதுதவிர பிகாரில் பாஜக தலைவர் சுஷில் மோடி மாநிலங்களவைக்குத் தேர்வானார், வினோத் நரைன் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், அவர்கள் பொறுப்பு வகித்த மேலவை உறுப்பினர் பதவிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சட்ட மேலவை உறுப்பினர் போதுல சுனிதா ராஜிநாமா செய்தார். இதனால், அந்தப் பொறுப்புக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இவை அனைத்திற்கும் ஜனவரி 28-இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்று ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.