இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதி நவீன ஏவுகணை சோதனை கடந்த வாரத்தின் மத்தியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அவ்வப்போது ராணுவத்திற்குத் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்து சோதித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதிநவீன வான் ஏவுகணை கடந்த வாரத்தின் மத்தியில் இஸ்ரேலில் சோதிக்கப்பட்டது. இந்தத் தகவலை இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.