தமிழக-ஆந்திர எல்லையில், தமிழ்நாடு அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா்.
தமிழகத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திர-தமிழக எல்லையான தடுக்குபேட்டை அருகே சாலையோர உணவகம் முன்பு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 போ் காயமடைந்தனா்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.