நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,346 பேருக்கு தொற்று:  222 பேர் பலி

நாடு முழுவதும் புதிதாக 20,346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,346 பேருக்கு தொற்று:  222 பேர் பலி

புது தில்லி: நாடு முழுவதும் புதிதாக 20,346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 20,346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,95,278-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 222 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,336-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,587 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,00,16,859-ஆக அதிகரித்தது. 

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,28,083 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 17-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 6-ஆம் தேதி வரை 17,84,00,995 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 9,37,590 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com