நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 18,645 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,04,50,284-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,299 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,00,75,950-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.42 சதவீதமாகும்.
கரோனா தொற்றுக்கு மேலும் 201போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,999-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,23,335 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.14சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 9-ஆம் தேதி வரை 18 கோடியே10 லட்சத்து 96 ஆயிரத்து 622 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,43,307 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.