உத்தரப் பிரதேசத்தில் எட்டாவாவில் உள்ள நவ்லி கிராமத்தில் திடீரென 30 காகங்கள் உயிரிழந்துள்ளன.
கரோனாவுக்கு அடுத்தபடியாக பறவைக் காய்ச்சல் பல மாநிலங்களில் சமீப காலமாக பரவி வருகின்றது. இதனால், பல பறவைகளை கொத்துகொத்தாக உயிரிழந்து வருகின்றது.
இந்நிலையில், உ.பி.யில் திடீரென நேற்று 30 காகங்கள் பலியாகியுள்ளன. இறந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ஐவிஆர்ஐ) அனுப்பப்பட்டதாக எட்டாவா வனத்துறை அதிகாரி ராஜேஷ் குமார் வர்மா தெரிவித்தார்.
இறந்த பறவைகளைப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.
இதற்கிடையில், தலைமை கால்நடை அலுவலர் வினீத் பாண்டே கூறுகையில்,
மேலும், காய்ச்சல் பரவாமல் இருக்கக் குழுவினர் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.