
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவு
அசாம் மாநிலத்தில் வியாழக்கிழமை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அசாம் மாநிலத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. டிமா ஹசாவோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவானது. அதிகாலை 12.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.