வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியுள்ளது.
தில்லி மற்றும் அதனைச் சுற்றிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தில்லியில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்து வருகிறது.
சஃப்தர்ஜங் பகுதியில் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. பாலத்தில் வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸில் பதிவு செய்யப்பட்டது.
பனிப்பொழிவின் காரணமாக தில்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவாகியுள்ளது. ஆனந்த் விஹார், மந்திர் மார்க் மற்றும் ஆர்.கே.புரம் பகுதிகளில் முறையே காற்றின் தரநிலையானது 431, 418 மற்றும் 450 என பதிவாகியுள்ளது.