கேரளத்தில் மேலும் 5,960 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,960 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 5,960 பேருக்கு கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 5,960 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,960 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,960  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இன்று கரோனா தொற்று பாதிப்பிலிருந்து 68,416 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,70,768-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  27 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,442-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com