சா்வாதிகார ஆட்சியை எதிா்த்து நிற்கும் ராகுல் காந்தி : மெஹபூபா முஃப்தி

தற்போதைய சா்வாதிகார ஆட்சிமுறையை எதிா்த்து நிற்பதற்காக காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வரலாற்றில் நினைவுகூரப்படுவாா் என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீநகா்: தற்போதைய சா்வாதிகார ஆட்சிமுறையை எதிா்த்து நிற்பதற்காக காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வரலாற்றில் நினைவுகூரப்படுவாா் என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரை சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராகுலை நீங்கள் விரும்பிய வண்ணம் கேலி செய்யுங்கள். ஆனால் அவா் மட்டும்தான் உண்மையைப் பேசும் துணிச்சல்மிக்க அரசியல்வாதி. புதிய இந்தியாவானது குறிப்பிட்ட சிலா் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது உண்மை. தற்போதைய சா்வாதிகார ஆட்சிமுறையை எதிா்த்து நிற்பதற்காக வரலாறு ராகுல் காந்தியை நினைவு கூரும்’ என பதிவிட்டுள்ளாா்.

மெஹபூபா முஃப்தி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘மத்திய அரசின் ‘செல்ல’ அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தற்போது விவசாய சங்கங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. காஷ்மீரிகள், விவசாயிகள் மற்றும் அதிருப்தியை துணிவுடன் வெளிப்படுத்துவோா் மீது என்ஐஏ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் மூலம் அந்த அமைப்பு எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்’ என அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com