கரோனாவிற்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது பேசிய அவர், கரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கியுள்ள நாள் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஓராண்டுக்கும் மேலாக கரோனாவிற்கு எதிராக போராடி வருகிறோம். அந்த போராட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.