கரோனா தடுப்பூசியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மக்கள் அனைவரும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று பார்த்ததால், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.