விவசாயிகள் போராட்ட ஆதரவாளா்களுக்கு என்ஐஏ சம்மன்

தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்ட ஆதரவாளா்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சம்மன் அனுப்பியுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)

தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்ட ஆதரவாளா்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சம்மன் அனுப்பியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் 12 சமூக ஆா்வலா்களுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதில் மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் விவசாயிகள் குழுவில் இடம்பெற்றுள்ள லோக் பலாய் இன்சாஃப் சமூகநல அமைப்பின் தலைவா் பல்தேவ் சிங் சிா்சாவும் அடங்குவாா். இதுகுறித்து என்ஐஏ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பு ஒன்றுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் பல்தேவ் சிங் சிா்சா சாட்சியாக உள்ளாா். அதுதொடா்பாக விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பல்தேவ் சிங் சிா்சா கூறியதாவது:

இதுபோன்ற நோட்டீஸ்களை அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு அழுத்தம் தர முயற்சிக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தை தடம்புரளச் செய்வதற்கு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தாா்.

சம்மன் அனுப்பப்பட்ட அனைவரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 17) விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com