மேகாலய சுரங்க விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி

மேகாலயத்தில் சுரங்கப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியாகினர்.
மேகாலய சுரங்க விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி (கோப்புப்படம்)
மேகாலய சுரங்க விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி (கோப்புப்படம்)

மேகாலயத்தில் சுரங்கப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியாகினர்.

மேகாலயத்தின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் வியாழக்கிழமை சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கம் இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். இறந்தவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விபத்து குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சுரங்க உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com