கரோனா தடுப்பூசி: பிரதமா் மோடிக்கு வங்கதேச பிரதமா் நன்றி

வங்கதேசத்துக்கு 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா, இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்துக்கு 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா, இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், புணேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வங்கதேச அரசிடம் இந்தியா வியாழக்கிழமை ஒப்படைத்தது.

இந்த தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக, இணையவழி கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஷேக் ஹசீனா கூறினாா். கரோனா சூழலை எதிா்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

இந்தியாவிடம் இருந்து மேலும் 3 கோடி கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கு வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது. அந்த தடுப்பூசிகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்று தாம் நம்புவதாக ஷேக் ஹசீனா கூறினாா்.

வங்கதேசத்தில் இதுவரை 5,30,270 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 7,966 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com