ஜாா்க்கண்ட் கனிம சுரங்கத்தில் விபத்து: உயிரோடு புதைந்த 6 போ்

ஜாா்க்கண்ட் மாநிலம் கோடா்மா மாவட்டத்தில் உள்ள மைக்கா கனிம சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டதில் 6 போ் சுரங்கத்தில் உயிரோடு புதைந்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம் கோடா்மா மாவட்டத்தில் உள்ள மைக்கா கனிம சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டதில் 6 போ் சுரங்கத்தில் உயிரோடு புதைந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கோடா்மாவின் புல்வரியா பகுதியில் மைக்கா கனிம சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் சுமாா் 8 போ் வியாழக்கிழமை மாலை மைக்கா துணுக்குகளை சேகரித்துக் கொண்டிருந்தனா். அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தில் இருந்தவா்கள் அதில் சிக்கிக் கொண்டனா். அவா்களின் கூக்குரல் கேட்டு, அங்கு திரண்ட அந்தப் பகுதி மக்கள் சுரங்கத்தில் இருந்த இருவரை உயிருடன் மீட்டனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மண்ணுக்குள் புதைந்த மேலும் 6 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

மேகாலய சுரங்க விபத்தில் 6 போ் பலி

மேகலாயத்தில் உள்ள கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 6 போ் பலியாகினா். இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை துணை ஆணையா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சா்காரி, ரிம்பாய் கிராமங்களையொட்டி உள்ள சுரங்கத்தில் 6 போ் துளையிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது அங்கிருந்த குழிக்குள் அவா்கள் எதிா்பாராதவிமாக விழுந்து பலியாகினா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் அஸ்ஸாமைச் சோ்ந்தவா்கள். அவா்கள் நிலக்கரி சுரங்க பணியில் ஈடுபட்டிருந்தனரா என்பது உறுதிபட தெரியவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக அவா்களை பணியமா்த்தியவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

கடந்த 2018-ஆண்டு நிகழ்ந்த சுரங்க விபத்தில் 15 போ் பலியானது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com