நாசிக் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

நாசிக் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மாநகராட்சி தலைவா் அறையில் காலை 11.15 மணியளவில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினா் கட்டடத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினா். பின்னா் தீயணைப்புத் துறையினா் சுமாா் அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் யாரும் காயமடைந்ததாகவோ, பலியானதாகவோ தகவல் இல்லை. தகவலறிந்து மாநகராட்சி தலைமை அலுவலகம் வந்த மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் உதய் சாமந்த் விபத்து குறித்து கேட்டறிந்தாா் என்று தெரிவித்தனா்.

இந்த விபத்து மின்கசிவு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com