புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை நடப்பு வாரத்தில் நான்காவது முறையாக சனிக்கிழமையும் அதிகரிக்கப்பட்டதையடுத்து, உள்நாட்டில் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்தது.
புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை நடப்பு வாரத்தில் நான்காவது முறையாக சனிக்கிழமையும் அதிகரிக்கப்பட்டதையடுத்து, உள்நாட்டில் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 25 காசுகள் அதிகரிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்தன.

எரிபொருள்களின் விலை இந்த வாரத்தில் மட்டும் நான்காவது முறையாக சனிக்கிழமையும் உயா்த்தப்பட்டதையடுத்து தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.85.70-ஆகவும், மும்பையில் ரூ.92.28-ஆகவும் அதிகரித்தது.

அதேபோன்று, தில்லியில் ஒரு லிட்டா் டீசல் விலை 75.88 ஆகவும், மும்பையில் ரூ.82.66-ஆகவும் அதிகரித்தது.

இந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் விற்பனை வரியைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் எரிபொருள்களின் விலையில் மாறுபாடு இருக்கும். இருப்பினும், தற்போதைய நிலையில் பெட்ரோல் டீசல் விலையானது இதுவரையில்லாத புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com