தெலங்கானாவில் மே 17-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மே 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், மாணவர்களுக்கு வருகைப் பதிவு அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பின்னர் மத்திய அரசு அளித்த தளர்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகள் திறப்பை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் தெலங்கானாவில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியினை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 17 முதல் 26-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு குறைந்தபட்ச வருகைப் பதிவு அவசியமில்லை என்றும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.