இந்தியாவில் ஒரேநாளில் 13,203 பேருக்கு கரோனா; 131 போ் பலி

நாடு முழுவதும் மேலும் 13,203 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 13,203 பேருக்கு கரோனா; 131 போ் பலி

நாடு முழுவதும் மேலும் 13,203 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திங்கள்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 13,203 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,67,736-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 13,298 போ் குணமடைந்தனா். 

இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,03,30,084-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு இன்று 131 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,470-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,84,182 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

அதேசமயம் 16,15,504 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.23 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 5,70,246 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com